search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் உயிரி தப்பினார்"

    சேலத்தில் இன்று காலை நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே அரசு ஆவின்பால் பண்ணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட் மேலாளர் பயன்படுத்துவதற்காக அரசு சார்பில் கார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரை மேட்டூர் சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 34) என்பவர் ஓட்டி வருகிறார். இன்று காலையில் வழக்கமாக மேலாளரை காரில் அழைத்து வந்து ஆவின் நிறுவனத்தில் இறக்கி விட்டார்.

    அதன் பிறகு ஆவின் நிறுவனத்தின் கீழ் இரும்பாலை ரோட்டில்  இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் வசூலான ரூ.2 லட்சத்தை  வங்கியில் செலுத்துவதற்காக ஊழியர் குமார் என்பவரை காரில் ஏற்றிக்கொண்டு ராமகிருஷ்ணா பூங்காவிற்கு வந்தார். அங்கு வங்கி வாசல் முன்பு ஊழியரை இறக்கி விட்டு விட்டு, பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு வருமாறு கூறிக் கொண்டு ரங்கநாதன் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தினார். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து குபு, குபு வென புகை வெளியேறியது.

    இதை பார்த்ததும் ரங்கநாதன் காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கி சிறிது தூரம் தள்ளி சென்று நின்று கொண்டு செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    அதற்குள் கார் முன்பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் தண்ணீரை எடுத்து வந்து காரின் மீது ஊற்றினார்கள். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் தீயணைப்பு வீரர்களும் காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
    ×